திருமழிசை பேரூராட்சியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ரவி என்பவர் ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Loading

திருமழிசை பேரூராட்சியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ரவி என்பவர் ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக ஆறு வார்டிலும் பாமக ஒரு வார்டிலும் சுயட்சை உருவாகும் திமுக ஆர்வத்திலும் அதிமுக வெற்றி பெற்றது. இதில் அதிமுகவுக்கு ஆதரவாக பாமக வேட்பாளரும் சுயேட்சை வேட்பாளரும் ஆதரவளித்து எட்டு பேர் அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரமேஷ் என்பவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் அதிமுகவை சேர்ந்த ரமேஷ் தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவினர் செயல் அலுவலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக ஏழு பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் அதிமுக சார்பில் வாக்களித்ததில் இரண்டு பேருடைய வாக்குகள் செல்லாதவை யாக அறிவித்த செயல் அலுவலர் திமுக உறுப்பினர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் வாக்குவாதத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். செல்லாத வாக்குகளை அறிவிக்கப்பட்டது குறித்து அதிமுக தலைவர் வேட்பாளர் ரமேஷ் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அதிமுகவினர் அராஜகத்தை ஈடுபடுவதாக கூறி அவரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

என்னுடைய பிற்பகல் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவித்து இருந்த நிலையில் தலைவர் தேர்தலுக்கான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வரை புகார் சென்றதால் துணைத் தலைவர் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல் அலுவலர் ரவி செயல்பட்டதாகவம் பாமக உறுப்பினரிடம் 30 லட்சம் வாங்கி தருகிறேன் திமுகவுக்கு வாக்களியுங்கள் என பகிரங்கமாக பேரம் பேசியதாகவும் கூறி அதிமுக மா பா ம க மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் தேர்தல் அதிகாரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் புகார் செய்தார். அரசு அதிகாரி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது ஜனநாயகப் படுகொலை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி ரவி மீது தேர்தல் அணையமும் மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் மனு அளித்தார். ஆட்சியர் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *