உக்ரைன் விவகாரத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்படும் பாகிஸ்தான்
உக்ரைன் மீது ரஷியா இன்று காலை ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இச்சூழலில், அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷியாவுக்கு சென்றுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்கா, “ரஷியாவின் நடவடிக்கைக்கு பொறுப்புமிக்க அனைத்து நாடுகளும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தது.
உக்ரைன் விவகாரத்தில் தங்களின் நிலைபாடு குறித்து பாகிஸ்தானிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைக்கத்தின் செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் புதினை இம்ரானின் கான் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து நெட் பிரைஸிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய படையெடுப்பு தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாகிஸ்தானுக்குத் தெரிவித்துள்ளோம்.
மேலும் போரில் இராஜதந்திரத்தைத் தொடர நாங்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியுள்ளோம். உக்ரைனுடனான உறவை அமெரிக்க நலன் சார்ந்த பார்ப்பது முக்கியம்” என்றார்.
ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை மாஸ்கோவுக்கு சென்றார். கிழக்கு உக்ரைனில் ரஷியா படைகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷியா மீது பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இம்ரான் கானும் புதினும் ஆலோசிக்கவுள்ளனர்.
இதையும் படிக்க
உக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை
தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பரஸ்பர நலன் குறித்தும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ரஷியா ராணுவம் நுழைந்த நிலையில், ரஷியாவுக்கு செல்லும் முதல் உலக தலைவர் இம்ரான் கானே ஆவார். 23 ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் உள்ள ஒருவர் ரஷியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.