காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவியையும் அவரின் காதலரையும் போலீசார் கைது செய்தனர்

Loading

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் என்ற கணவர் சோனம் என்ற இளம் மனைவியுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன் கள்ள காதல் உண்டானது .அந்த விஷயம் அந்த கணவர் சர்வேஷுக்கு நாளடைவில் தெரிய வந்ததும் ,அந்த கணவன் மனைவிக்குள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்துள்ளது .அப்போதெல்லாம் அந்த சோனம் தான் எவரோடும் கள்ள உறவில் ஈடுபடவில்லை என்று கூறினார் .

அதனால் அந்த சர்வேஷ் அந்த மனைவியை கள்ள காதலனுடன் கையும் களவுமாக பிடிக்க வீட்டில் ஒளிந்து கொண்டார் .அப்போது அந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்க அந்த காதலன் வீட்டினுள் வந்து ,அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்தனர் .அதை அந்த கணவன் ஒளிந்து பார்த்து ,திடீரென்று வெளியே வந்து இருவரையும் பிடித்தார் .அப்போது அவரை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த சர்வேஷை அடித்து கொலை செய்து வீட்டின் பின்பக்கம் வீசி விட்டனர் .பின்னர் அந்த மனைவி போலீசை வரவைத்து யாரோ சில மர்ம நபர்கள் தன் கணவரை கொன்று விட்டதாக கூறினார் .ஆனால் பொலிஸார் அந்த சோனம் மீது சந்தேகப்பட்டு அவரை விசாரித்த போது, அவர் காதலனோடு சேர்ந்து அவரை கொன்றதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *