பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில், ஆத்திரத்தில் இரண்டு வயது மகளை பாலியல்

Loading

பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில், ஆத்திரத்தில் இரண்டு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் விரைவு நீதிமன்றம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அந்த நபர், பிறந்த குழந்தை தன் சாயலில் இல்லை. அது தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று மனைவியிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்.

தனக்கு பிறந்த குழந்தை அது இல்லை என்று அந்த குழந்தை மீது தொடர்ந்து எரிச்சலில் இருந்து வந்துள்ளார் தந்தை. இந்த நிலையில் அந்த இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

இத்தனை நாளும் தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று சொல்லி வந்த அந்த நபர் இந்த குழந்தையை பழிவாங்கும் நோக்கில் அப்படி நடந்து கொண்டாரா என்று கேள்வி எழுந்தது. இதனால் ஆத்திரம் கொண்ட அவரின் மனைவி போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதை அடுத்து திருவனந்தபுரம் அதிவிரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். தாயின் சாட்சிதான் இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நபருக்கு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *