பிஞ்சு குழந்தை கையேந்த..! கையை விரித்த ராஷ்மிகா..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

Loading

எக்ஸ்பிரஷன் குயினாக இந்திய இளைஞர்களை கிரங்கடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தானா, செய்யாத ஒரு செயலுக்காக பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பொதுவாக திரையுலகில் உச்சமாக இருக்கும் நட்சத்திரங்கள் பொது வாழ்க்கையிலும் சில நன்மைகளை செய்ய வேண்டும் என பொதுமக்கம் எதிர்பார்ப்பர். அவ்வாறு அவர்கள் அதனை செய்ய வில்லை என்றால், அதன்பிறகு அவர் மீதான பார்வையும், மரியாதையும் சற்று குறையத் துவங்கும். அதுபோலத்தான் ராஷ்மிகாவி செயலும் ஆகியுள்ளது. புகழின் உச்சியில் கொடி கட்டி பறக்கும் ராஷ்மிகாவின் இந்த சிறு செயல், அவரது இமேஜை டேமேஜ் செய்து வருகிறது. என்ன செய்தார் என்பதை பார்ப்போம்…

‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்த இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. 2016-ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பினால் முத்திரைப் பதித்தார். தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் அறிமுகமானவருக்கு, ரசிகர் பட்டாளம் பல மடங்காக பெருகியது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, மறுபடியும் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தமிழ் ரசிகர்களை கவர, கார்த்திக்குடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் மூலம் எதிர்பார்த்த அளவு அவரால் தமிழ் ரசிகர்களை பெற முடியவில்லை. இருப்பினும் பிற மொழி படங்களிலே ராஷ்மிகாவை ரசித்து வந்தனர் தமிழ்நாட்டு இளசுகள்.

சமீபத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக புஷ்பா படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. அல்லு அர்ஜூன், பகத் பாசில், சுனில் அனுசியா என பலர் நடிப்பில் 5மொழிகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்தாலும் கூட, வசூலை குவித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வரும் டாப் நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா. இப்படி தென்னிந்தியாவில் பிசியாக நடிக்கும் ராஷ்மிகாவை சுற்றி எப்போதும் ரசிகர்களின் பார்வை இருந்து கொண்டே தான் இருக்கும். மும்பை ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ராஷ்மிகாவை பார்த்த சிறு குழந்தை ஒன்று சாப்பிட ஏதாவது கொடுங்கள் என கையேந்திய போது, தன்னிடம் எதுவும் இல்லை என சைகை காட்டி, அக்குழந்தையை புறக்கணித்து விட்டு காரில் ஏறி சென்றார் ராஷ்மிகா. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ராஷ்மிகாவை பலரும் திட்டி வருகின்றனர். சாதாரண பொதுமக்களே சாலையில் யாரேனும் கையேந்தினால், சாப்பாடோ அல்லது பணமோ கொடுத்து விட்டு தான் செல்வார்கள். அப்படியிருக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை சிறு குழந்தைக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் புறக்கணித்து சென்றது வருத்ததிற்குரியது, வேதனைகுரியது என இணையவாசிகள் சாடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *