அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொடியேற்றும் நிகழ்வு நடந்தேறியது. மாநில தலைவர் லயன் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் அவர்கள் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் சங்க துணைச் செயலாளர் கொ.அன்புகுமார், மாநில துணைத் தலைவர் முத்து, தென்சென்னை மாவட்ட தலைவர் தி.மு. காமராஜ், தென் சென்னை செயலாளர் J. நித்யராஜன், பொருளாளர் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் ஜெயராமன், தணிகாசலம், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் குடியரசு தின விழாவின் முக்கியத்துவம் குறித்தும் நாட்டின் தேசிய தலைவர்கள் குறித்தும் நெகிழ்ச்சியோடு பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.