பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலிகள் காட்சி மூலம் திறந்துவைத்தார்

Loading

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலிகள் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்நர்களின் வசதிக்காக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 22கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட பிரத்யேக குடிநீர்த்திட்ட பணிகள் நிறைவடைந்தது.அதேபோல மின்தூக்கி, நாதமணி மண்டபம், பெரிய நாயகி அம்மன் கோவிலில் புதிய அன்னதானக்கூடம் ஆகியவற்றின் பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்‌. முதலமைச்சர் திறந்துவைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன்,திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர்‌ செந்தில்குமார், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *