மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை : மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் குறிப்பில் பிடிஐ,
தி இந்து, பிரண்ட்லைன், லிங்க் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இடதுசாரிப் பார்வையும் மனிதநேயப் பற்றும் கொண்டிருந்த துரைராஜ் அவர்கள், எளிய மக்களின் உரிமைகள் மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தன் பணியைப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளிலும் பொறுப்பு வகித்த அவர், அடக்குமுறைகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர்.
அவரது மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் இத்தருணத்தில் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.