கொவிட் எதிர்ப்புக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் யோகா பயிற்சி

Loading

கண்ணோட்டம்

யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதுடன், மனதை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியில் ஏற்பட்ட சமநிலை குலைவு அனைவருக்குமே கவலையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக எதிர்மறை செய்திகள், பொருளாதாரப் பற்றாக்குறை, பொது முடக்கம் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை கவலைகளையும் மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில், உயிர்வாழ்வதற்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வீட்டில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் மனச்சோர்விலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும்.

ஏன் யோகா?

தொடர்ச்சியான கவலை அல்லது மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், தசைப் பதற்றம், சுவாசப் பிரச்சனைகள் போன்ற பல நோய்களுக்கு இட்டு செல்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், யோகா அமைதியாக இருக்க உதவுவதுடன், பதற்றம் மற்றும் மூட்டுப் பிரச்சனைகளைக் குறைக்கவும், மனதை இலகுவாக்கவும் உதவுகிறது. சுவாசத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதையும் யோகா ஒருவருக்குக் கற்றுக்கொடுக்கிறது, இது ஒரு நபரை நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.

தொற்றுநோய்களின் போது யோகா – காலத்தின் தேவை:

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வீட்டிலேயே செய்ய மற்றும் நுரையீரலை வலுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எட்டு வகையான யோகா பயிற்சிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

யோகா பயிற்சிகள் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமின்றி, நுரையீரல் திறனை மேம்படுத்துவதோடு, உடலில் இருந்து நச்சுகளை அகற்றி, சுவாசக் குழாயை எந்தவிதமான தொற்றுநோய்களிலிருந்தும் விடுவிப்பதன் மூலம் சரியாக சுவாசிக்க உதவும்.

முடிவுரை:

மிகவும் வலுவான உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கிய அமைப்பை உருவாக்க யோகா உதவுகிறது. உடல் ரீதியாக வலுவாகவும், மன ரீதியாக சமநிலையுடனும் இருக்க உதவும் பலவகையான யோகாக்கள் உள்ளன. பூங்காவில் சாதாரண நடைப்பயிற்சி அல்லது 30 நிமிட ஹார்ட்-கோர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போல, யோகா அனைத்துப் பலன்களையும் தருகிறது. இது எல்லா வயதினரும் செய்யக்கூடியதுடன், அனைவருக்கும் முழுமையான ஆரோக்கிய உணர்வை வழங்குகிறது. குறிப்பாக இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. எனவே, இந்த பொது முடக்கம் மற்றும் தொற்றுநோய் காலத்தில் ஆரோக்கியமாக வாழ, யோகாவை ஒரு வாழ்க்கை முறை பழக்கமாக ஏற்றுக்கொள்வது சிறந்ததாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *