பாஜக அரசின் மக்கள் விரோத துண்டு பிரசுரம் வினியோகம்

Loading

சென்னை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஐயா திரு.கே.எஸ்.அழகிரி
அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (23/11/2021) மாலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஜெ.டில்லிபாபு அவர்களின் தலைமையில் சர்க்கிள் தலைவர் திரு P.ஹரிபாபு அவர்களின் முன்னிலையில்
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைகளை பதிவிட்ட பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. காங்கிரசாரின் இந்த வீதிதோறும் விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை
இன்று மாலை GKM காலனி 37 வது தெருவில் தொடங்கி GKM காலனி 12 வது தெருவில் அருகில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் அசோகன், மாநில செயலாளர் அகரம் கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சாலமன், மாவட்ட மூத்த துணை தலைவர் ஆல்பர்ட் தேவ்.பொன்னையா, மாவட்ட துணை தலைவர்கள் வில்லிவாக்கம் சுரேஷ், லாவா முரளி, அசோக் குமார், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவி சரளாதேவி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சுகன்யா, சர்க்கிள் தலைவர்கள் முரளி, ஆனந்தராம், பீர் முகமது, ரஜினிசெல்வம், மதன்குமார், பாஸ்கர் வட்ட தலைவர்கள் ரமேஷ் ,கணேஷ் ,சிகாமணி, நந்தகுமார் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *