அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு…தலைமறைவாகியுள்ள கள்ளகாதலனுக்கு வலைவீச்சு

Loading

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு…தலைமறைவாகியுள்ள கள்ளகாதலனுக்கு வலைவீச்சு

சென்னை அம்பத்தூர் அருகே அழுகிய நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பகுதியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இறந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜானகி என்பது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஜானகிக்கு குழந்தையில்லை என்பதால் முதல் கணவருடன் விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக கஜேந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மண்ணூர் பேட்டை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் முதல் கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது முதல் கணவரிடம் எலக்ரீசியனாக வேலை செய்யும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஜேஷ் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜானகி உயிரிழந்தது தொடர்பாக 2 கணவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாகியுள்ள கேரளாவை சேர்ந்த ரஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *