வேறொரு பெண்ணுடன் செல்போனில் உரையாடிய கணவன்… தட்டி கேட்ட மனைவியை அடித்து உதைத்த சம்பவம்…

Loading

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேறொரு பெண்ணுடன் செல்போனில் உரையாடியதை தட்டி கேட்ட மனைவியை அடித்து உதைத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனாம்மணியாச்சியை சேர்ந்தவர் ரமேஷ். பொறியியல் பட்டதாரியான இவருக்கும், வில்லிசேரி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான ராதிகாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த ஒருவாரத்தில் கணவன், மனைவி இருவரும் கத்தார் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு இருவரும் வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் ரமேஷ், செல்போனில் வேறொரு பெண்ணுடன் நீண்ட நேரம் சார்ட்டிங் செய்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ராதிகா தட்டிக்கேட்கவே, ஆத்திரமடைந்த ரமேஷ், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *