குமரி மாவட்ட அமமுக வை சேர்ந்த மாவட்ட பொருளாளர் உட்படஅக்கட்சியில் விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கன்னியாகுமரி அக்டோபர்.16-
நாகர்கோவில் திமுக மாவட்ட அலுவலகத்தில் குமரி மாவட்ட அமமுகவை சேர்ந்த மாவட்ட பொருளாளர். தேவராஜன்,மாவட்ட துணை செயலாளர். சுள்பிகர் அலி, தோவாளை மேற்கு ஒன்றியச் செயலாளர். கனீஸ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் செந்தில் முருகன்,அம்மு அன்றோ ஏற்பாட்டில் அக்கட்சியில் விலகி தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.மனோ தங்கராஜ் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.ஆஸ்டின்,நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர். R.மகேஷ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். வழக்கறிஞர் M.சிவராஜ் மாவட்ட மாணவரணி அமைப்பாளர். வழக்கறிஞர் R.சதாசிவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவரணி துணை அமைப்பாளர். S .சந்திரசேகர் மற்றும் தம்புரான் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.