9 மாவட்ட ஊராட்சித் தேர்தலில் தி.மு.க அணி அபார வெற்றி தொடர் வெற்றிகளை குவித்த முதல்வர் தளபதியாருக்கு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வாழ்த்து

Loading

9 மாவட்ட ஊராட்சித் தேர்தலில் தி.மு.க அணி அபார வெற்றி தொடர் வெற்றிகளை குவித்த முதல்வர் தளபதியாருக்கு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வாழ்த்து 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊராட்சி தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது . இந்த வெற்றிக்கு வித்திட்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி பாராட்டுகிறது . தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று , ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகம் . முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5 மாத காலத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்து அரும்பணியாற்றி வருகிறார் . ஒவ்வொரு நாளும் ஒரு திட்டம் என உலகம் பாராட்டக் கூடிய அளவிற்கு தன்னுடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணித்து வருகிறார் . எல்லோராலும் பாராட்டக்கூடிய , நேசிக்கக் கூடிய ஒரு பொதுவானத் தலைவராக தளபதி அவர்கள் உருவெடுத்து வருகிறார் . ஐந்து மாதகால அவருடைய ஆட்சியின் சாதனைகளைக் கண்டு இந்தியா வியந்து நிற்கிறது . அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டுமென கூறக்கூடிய அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் அமைந்து வருகின்றன . அப்படிப்பட்ட அவருடைய செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி தான் அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் . தமிழ்நாட்டு மக்கள் இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டு முதலமைச்சருடைய பணிகளுக்கு ஒரு உயர்ந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர் . முதல்வரின் பணித் தொடர , எதிர்காலத்தில் தொடர் வெற்றிகளைக் குவிக்க விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வாழ்த்தி , என்றைக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றும் . அ.தி.மு.க இந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளது . குடும்ப ஓட்டுகளைக் கூட பெறமுடியாமல் , ஓரே ஒரு ஓட்டை மட்டும் பெற்று , உலக சாதனைப் புரிந்திருக்கிறார் பா.ஜ.க வேட்பாளர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *