பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
பழனிக்கோயிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு குறித்து செய்முறை விளக்கம் காட்டப்பட்டு வருகிறது. இன்று பழனி மலைக்கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் தீயணைப்புப்படை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பழனி மலைக்கோயில் மடப்பள்ளி சமையலர்கள், அன்னதானக்கூடத்தின் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், திருக்கோயில் பாதுகாவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். எரிவாயு உருளையில் தீப்பற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், எண்ணெயில் ஏற்படும் தீ, உடலில் பற்றும் தீ என தீயின் பல்வேறு வகைகள் குறித்தும் அவற்றை அணைக்கும் விதம் குறித்தும் தீயணைப்பு அதிகாரிகள் விளக்கினர். மேலும், காயமடைந்தவர்களை அவர்களின் காயத்துக்கு ஏற்ப மீட்கும் வழி முறைகள் குறித்தும், பொதுஇடங்களில் ஏற்படும் தீவிபத்தை தண்ணீர் பீய்ச்சும் குழாய்கள் மூலம் அணைப்பது குறித்தும் வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். மேலும், வீடுகளில் விஷ ஜந்துக்கள் நுழைந்தால் எவ்வாறு அவற்றை பிடிப்பது என்றும் செய்து காட்டினர்.