ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற நபர் கைது.

Loading

சென்னை, வெள்ளானூர், விஜயலட்சுமி நகரில் வசித்து வரும்
செந்தில் முருகன், வ/40, த/பெ.சுப்பையா பிள்ளை என்பவர் திருவள்ளூர்
மாவட்டம், வெங்கல், பகுதியில் புட் & டைரி கம்பெனியில் செக்யூரிட்டியாக
வேலை பார்த்து வருகிறார். செந்தில் முருகன் நேற்று (03.10.2021) இரவு
வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் மோரை-அலமாதி ரோடு
AIETAC மகளிர் தொழில் பூங்கா (SIDCO) அருகில் சென்று
கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் மேற்படி செந்தில்
முருகனின் இருசக்கர வாகனத்தை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்
வைத்திருத்த பணம் ரூ.510/- பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்
சென்றனர். இது குறித்து செந்தில் முருகன், T-7 ஆவடி டேங்க்
பேக்டரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை
செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், வ/35, த/பெ.மாரி,
எண்.1804 D பிளாக் 5வது தெரு, புதிய கன்னியம்மன் நகர், வீராபுரம், சென்னை
என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு
குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில்
ஆஜர் செய்யப்படவுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *