நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டிய கடலாடி காவல் நிலையம்

Loading

நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டிய கடலாடி காவல் நிலையம் மகளை கண்டுபிடித்து தரவேண்டும் எஸ்,பி ,அலுவலகத்தில் கண்ணீர் மனு…

திருவண்ணாமலை செப்.27,

திருவண்ணாமலை மாவட்டம்கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45).இவரது மனைவி சக்தி (40). என்பவர்,நேற்று கடத்தப்பட்ட எனது மகளை மீட்டுத்தாருங்கள் என்று பெற்றோர் கண்ணீர் மல்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; எனக்கு 2 மகள்கள் உள்ளனர் எனது பெரிய மகளுக்கு திருமணமாகி விட்டது, எனது இளைய மகளுக்கு 20 வயதாகிறது. பிகாம் பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்தார். வீட்டிலிருந்த எனது இளைய மகளை கடந்த 9ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து காணவில்லை. உறவினர் வீடு, அக்கம்பக்கம் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோதுஎனது மகளை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கேட்டவரம்பாளையம் பழைய காலனி பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மகன் நவீன் குமார் (20) இருசக்கர வாகனத்தில் கடத்தி
சென்றதாக அறிந்தேன். இதுகுறித்து ரங்கநாதனிடம் கேட்டதற்கு அவர் அலட்சியமாகப் பதில் சொல்கிறார். ஒன்றுமறியா எனது மகளுக்கு ஆசை வார்த்தை கூறி பழகி, அவளை மிரட்டி கடத்திச் சென்றுள்ள‌ எனது மகளை கண்டுபிடித்து, மற்றும்நவீன் குமாரிடமிருந்து எனது மகளை
மீட்டுத்தர வேண்டும்,. இது குறித்து கடலாடி காவல் நிலையத்திலும், புகார் அளித்திருந்தோம் எங்களது புகாரின் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை கேட்டால் அலட்சியமான பதில் கூறி வருகின்றனர், போளூர்மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடமும் புகார்கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருமண வயது நிரம்பாத
நவீன்குமாரை அழைத்து விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுத்து
எனது மகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இருந்தால் வேற வழி இல்லாமல் குடும்பத்துடன் நாங்கள்தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் எனதெரிவித்தனர்….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *