முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் தீவிரமாக கண்காணித்து அபராதம் விதிப்பு

Loading

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி
இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு-
முகக்கவசம் கட்டாயம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வுகள் மற்றும்
முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்கள் தீவிரமாக கண்காணித்து

அபராதம் விதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு
மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும்
வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
உத்தரவின்பேரில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க, பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையர் திரு.ககன்தீப் சிங், இ.ஆ.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி,
அதிகாரிகள் இணைந்து 15.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை பெருநகரின் காவல்துறை மற்றும்
மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து 16.9.2021 முதல் 26.09.2021 வரை சென்னை
பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்
நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை
பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்பேரில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர
காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் (Zonal
Enforcement Teams – ZETs) நேற்று (16.09.2021) முதல் சென்னை பெருநகரில்
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சந்தைகள், திருமண மண்டபங்கள் மற்றும் விழா
நடைபெறும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்
அணிவதை வலியுறுத்தியும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தும்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும்
நிலையான சோதனை சாவடிகள் அமைத்து, இதில் 200 காவல்துறை ஆளினர் மற்றும் 1,000
தன்னார்வலர்களை கொண்ட ஐந்துகள ஆய்வு பணியாளர்கள் (FSW) இ,ணைந்து தீவிரமாக
கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்டை மாவட்டங்களான
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நிலையான
சோதனை சாவடிகளும், 45 காவல் ஆளினர்கள் மற்றும் 225 தன்னார்வலர்கள் இணைந்து
கண்காணித்து வருகின்றனர்.

மேலும், 18.9.2021 மற்றும் 25.9.2021 ஆகிய 2 சனிக்கிழமை நாட்களில் பெருநகர
சென்னை மாநகராட்சியின் பிராந்திய துணை ஆணையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர
காவல்துறை துணை ஆணையாளர்கள் அந்தஸ்தில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 16.9.2021 மற்றும் 17.9.2021 ஆகிய நாட்களில் 10 பள்ளிகள்
மற்றும் கல்லூரிகளில் சரக காவல்துறை உதவி ஆணையாளர்கள் கொரோனா தடுப்பு
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இதே போல 20.9.2021
மற்றும் 24.9.2021 ஆகிய நாட்களிலும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற
உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 16.09.2021 மற்றும் 17.09.2021 ஆகிய 2 நாட்களில் சென்னை
காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி குழுவினர் இணைந்து பெருநகர
சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்
எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய
மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர தடுப்பு சோதனையில், முகக்கவசம் அணியாமல்
சென்ற பொதுமக்கள் மீது 941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் ரூ.1,86,200/-
வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள்
கடைபிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும்,
கொரோனா தொற்று 3வது அலை ஏற்படா வண்ணம் ஒத்துழைக்குமாறு, சென்னை பெருநகர
காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *