ஒட்டன்சத்திரம் நகர தே.மு.தி.க சார்பில் கேப்டன் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பஆலய வழிபாடுகள் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர த தே.மு.தி.க சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சி நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறப்புடன் குணமடைந்து வீடு திரும்ப ஒட்டன்சத்திரம் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நகர தே.மு.தி.க சார்பில் ஆலய வழிபாடுகள் செய்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.
இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே. பாலசுப்ரமணி தலைமையில் தனது குடும்பத்தோடு வந்து துபாயில் சிகிச்சை பெற்று வரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டி பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர் இதற்கான ஏற்பாட்டினை ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் சிக்கந்தர் செய்திருந்தார் மேலும் நிகழ்ச்சியில்
நகர அவைத்தலைவர்,
சரவணன் பொருளாளர் சின்ராசு,நகரத் துணைச் செயலாளர் கார்த்திக், நகர துணை செயலாளர் ஜி.டி.விக்னேஷ் நகர கேப்டன் மன்ற செயலாளர் மணிஜி,
மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டு ஆலய வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் செய்தனர்.