ரக்ஷா பந்தன்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் – ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Loading

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ‘தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என மக்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரக்ஷாபந்தன்விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் அடையாளமாகும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் இந்த விழா வலுப்படுத்துகிறது. இந்த சிறப்பு தருணத்தில், மக்கள் தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை காப்பதில் உயா் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, அவா்களின் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நன்னாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *