குட்கா பான்பராக் பொருட்கள் பறிமுதல்.

Loading

மாரண்டஹள்ளியில் 15 ஆயிரம் மதிப்பிலான குட்கா பான்பராக் பொருட்கள் பறிமுதல்

பாலக்கோடு, ஜூலை.25-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சந்தை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (26) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக மாரண்டஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் குமார் மற்றும் போலீசார் அவருடைய கடையை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள், குட்கா, ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து அவரிடமிருந்து15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *