திருவள்ளூரில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில்” 1369 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

Loading

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளுர் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மொத்தம் 16421 மனுக்கள் பெறப்பட்டன. அதில் இதுநாள் வரையில் 14139 மனுக்கள் மீது நடவடிக்கைள் எடுக்கப்பட்டது.அதில் 3017 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 10641 மனுக்கள் பல்வேறு நடவடிக்கையின் பொருட்டு பரிசீலனையில் உள்ளது. 2763 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில்” பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து தீர்வு காணப்பட்டவர்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் 165 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ரூ. 98,92,020 மதிப்பீட்டிலும், 996 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1000 வீதம் ரூ.1,19,52,000-ம் வழங்கவும், 102 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23660 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மோட்டா பொருத்திய தையல் இயந்திரமும், ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக 26 நபர்களுக்கு பசுமை வீடுகள் ரூ.9,72,000-ம் மதிப்பீட்டிலும், அடிப்படை வசதிகளான குடிநீர் இணைப்பு, தார்சாலை அமைத்தல், தெருவிளக்குகள், பொது கழிப்பிடம், தடுப்பணைகள் போன்ற 75 திட்டங்கள் வாயிலாக ரூ.5,79,05,032 மதிப்பீட்டில் திட்டங்களும், தொழில் வணிகத்துறை மூலமாக 1 நபருக்கு சுயதொழில் தொடங்க கடன் உதவி ரூ. 2,00,000 என மொத்தம் 1369 பயனாளிகளுக்கு ரூ.8,09,44,712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு வழங்கினார்.

இதில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, , மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ட்டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன்;, மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி..ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் தேசிங்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *