குழந்தைகளுக்கு வித்தைகாட்டி வாழும் நாடோடி இனமக்கள் 25 பேருக்கு தொம்ரா இன சாதிச்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மூலம் சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டும, பாம்பு மற்றும் விலங்குகள் மூலம் குழந்தைகளுக்கு வித்தைகாட்டியும் வாழும் நாடோடி இனமக்கள் 25 பேருக்கு தொம்ரா இன
சாதிச்சான்றிதழையும்
மானாமதுரை வட்டத்திற்குள் வாழ்ந்து வரும் 11 குடும்பங்களுக்கு,
குடும்பம் ஒன்றிற்கு 3 சென்ட் வீதம் வீட்டுமனையையும்
மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் துறைசார் அலுவலர்களும் உடனிருந்தனர்