கருட வாகன ரோந்து துவக்க விழா.

Loading

ஆற்காடு ஜூலை_14 ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அவர்களால் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும் பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கருட வாகன ரோந்து நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கருட வாகனம் ரோந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்குள் 26 இருசக்கர வாகனங்கள் மூலம் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து செல்வார்கள் என்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் என்றால் 9498180972 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 5 நிமிடத்திற்குள் சம்பவ இடம் செல்வதற்கு ஏதுவாக இந்த கருட வாகனம் ரோந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதில் காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *