சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 264 வது குருபூஜை விழாவையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Loading

புதுச்சேரி, ஜூலை.12,
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 264 வது குருபூஜை விழா மாவீரன் அழகு முத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் மணிமாறன் தலைமையில் ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை எதிரே நடைபெற்றது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், முக கவசம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் சஞ்சீவி, காங்கிரஸ் பிரமுகர் பாசிங்கம் மற்றும் ரவி, மூர்த்தி, வரதராஜ், மோகன்தாஸ், ஆசிரியர் ரவிச்சந்திரன், அறக்கட்டளை துணைத் தலைவர் துரை ராஜேந்திரன், செயலாளர் ராம்குமார், பொருளாளர் மாறி பாண்டி, நிர்வாகிகள் மணி, ராமஜெயம், சம்பத், அருள்முருகன் சதீஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *