கெண்டேயன அள்ளி ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு

Loading

பாலக்கோடு, ஜுலை.10–
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், வாலிபரை தாக்கி தலைமறைவாக உள்ள கெண்டேயன அள்ளி ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கீழ்சந்திராபுரத்தை சேர்ந்த மகாதேவன் (39) இவர் மாரண்டஅள்ளியில் அரிசி வியபாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மகாதேவனும், சந்திராபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் சண்முகமும், கெண்டேன அள்ளி துணை தலைவர் தருமன் கொரோனா பாதிக்கப்பட்டு ஒசூரில் சிகிச்சைபெற்று வருவதாகவும், அவர் இறந்துவிட்டால் நம்பில் ஒருவர் துணை தலைவராகிவிடலாம் என பேசியதாக, கெண்டேன அள்ளி பஞ்சாயத்து தலைவியின் கணவர் ராமசாமி தருமனிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய தருமன், இது குறித்து மகாதேவனிடம் கேட்ட போது, தான் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் ராமசாமியிடம் கேட்டபோது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமசாமி மகாதேவனை தாக்கியதில், படுகாயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமசாமியை தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *