திருவள்ளூரில் பெட்ரோல், டீசல்,கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :

Loading

திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் பெட்ரோல், டீசல்,கியாஸ் விலை உயர்வு,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாநில துணை பொது செயலாளர் பா.பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல்,கியாஸ் விலை உயர்வு,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், கொரோனா தோற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்,கட்டுமான பொருட்கள்,அத்தியாவசிய பொருட்கள்,மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்து பதாகைகளை கைகளில் ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட தலைவர் ஆயில் சரவணன்,மாவட்ட துணை செயலாளர் புஜ்ஜி முரளி,நகர செயலாளர் மணிகண்டன்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் இ.பூவை மனோஜ்,ஒன்றிய செயலாளர்கள் புதூர் பாலாஜி,ரஜினிகாந்த், ஊராட்சி செயலாளர் கீழானூர் எஸ்.சுந்தர்,வி.கணேசன்,கேப்டன் மன்ற செயலாளர் தியாகு மற்றும் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *