கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் ஒரு முறை நடத்த பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம்காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம் சார்பில் நகர் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் உணவு கட்டுப்பாடு துறை ஆகியோர் ஏற்பாட்டில் கொரோன தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த தடுப்பூசி முகாமில் அதிகளவு பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
இதுகுறித்து செய்தியாளர்களும் பொதுமக்கள் கூறுவதாவது:
நகர் வர்த்தக சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி முகாம் வர்த்தகர்களை விட அதிகளவு பொதுமக்கள் கலந்து கொண்டதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது மீண்டும் இதே போன்று ஒரு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதுமட்டுமின்றி பொதுமக்கள் பயன்படும் விதமாக மீண்டும் ஒரு முறை தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்