குடும்பத்தகராறு தாய் இரண்டு குழந்தைகள் விஷமருந்தி தற்கொலை..! ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது
ஈரோடு ஜூலை 6
குடும்பத்தகராறு காரணமாக ஈரோடு அடுத்து கொளாநல்லி பகுதியில் உள்ள வீரப்ப கவுண்டன் காட்டூரில் வசித்து வந்த சசிகலா -பிரபு தம்பதியர் இடையே பல ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது இதற்கிடையே நேற்று
வழக்கம்போல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதில் விரக்தியடைந்த சசிகலா( 33),மகன் மிக்கின் சங்கர்( 12 ) மகள்சுதர்சனா(10) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை உட் கொண்டுள்ளனர் மிக்கின் சங்கர், சுதர்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சசிகலா. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கணவன்-மனைவி இடையே ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக இரு குழந்தைகள் மற்றும் தாய் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட செய்தியைக் கேட்டு அப்பகுதியில் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது இச்சம்பவம் குறித்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.