பஞ்சப்பள்ளி அருகே கணவன் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் உடல் தோண்டி பிரேத பரிசோதனை

Loading

பாலக்கோடு, ஜூலை. 4 –
தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள பசிகம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (37) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார், இவரது மனைவி வைத்தீஸ்வரி (30) இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பாண்டியனின் நண்பர்களான முரளி, சுந்தரம், முனுசாமி, இவர்கள் 4 பேரும் ஒன்றாக ஓசுர், இராயக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஒன்றாக வேலைக்கு சென்று வருவது வழக்கம் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் இனி குடிக்க கூடாது என அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் வேலைக்கு சென்று நண்பர்களுடன் குடித்துவிட்டு வந்ததால் கடந்த 30ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்த பாண்டியனை மாரண்டஅள்ளி தனியார் ஆஸ்பத்திரியல் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாண்டியன் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் பசிகம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் பாண்டியனின் மனைவி அவரது செல்போனை எடுத்து பார்த்த போது முரளி, சுந்தரம் ஆகியோருடன் பாண்டியன் பேசிய ஆடியோ பதிவாகியிருந்தது அதில் 3 பேருக்கும் பனம் சம்மந்தமாக வாய்த் தகராறு ஏற்பட்டிருந்தது ஆடியோ மூலம் தெரிய வந்தது.
இதனால் பணத்திற்காக முரளி, சுந்தரம் ஆகியோர் தனது கணவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதைக்கபட்ட பாண்டியன் உடலை நேற்று தோண்டி எடுத்து அதே இடத்தில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி அரசு மருத்துவர் மதன்ராஜ் பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து சென்றார், பின்னர் பாண்டியன் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *