தளபதி விஜய் அவர்கள் 47 வது பிறந்த வருடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி

Loading

சேலம்
தளபதி விஜய் அவர்கள் 47 வது பிறந்த வருடத்தில் சேலம் மாவட்டம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அதன்படி அதில் ஒரு நிகழ்வாக,அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு இரத்தம் தேவை இருப்பதாக இரத்த வங்கி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், அயோத்தியாபட்டிணம் தெற்கு மற்றும் நகர இளைஞர் அணிகள் சார்பில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரானா தொற்று காரணங்களால் மண்டபங்கள்,பொது இடங்களில் இரத்த தான முகாம் நடைபெற உரிமையாளர்கள் தயக்கம் தெரிவித்திருந்த நிலையில், A.V.S கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ விநாயகம் அவர்கள் ராமலிங்கபுரத்தில் அமைந்துள்ள A.V.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெற அனுமதி அளித்து இரத்ததான முகாமை தொடங்கிவைத்து இரத்த தானம் கொடுத்தவர்களுக்கு உணவுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது புதல்வர் பிரகதீஸ்வரர் 16 மரக்கன்றுகளை தளபதி விஜய் மக்கள் இயக்க சேலம் மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திபன் அவர்களிடம் வழங்கி கல்லூரி வளாகத்தின் உள்ளே அதனை நடவும் ஏற்பாடு செய்திருந்தார். ஏவிஎஸ் காலேஜ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ விநாயகம் மற்றும் அவரது புதல்வர் பிரகதீஸ்வரர் ஆகியோர் பல வருடங்களாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஏழைகளுக்கு உதவும் பல நற்காரியங்களுக்கு துணை நின்று வருகின்றனர். அதை தொடர்ந்து இம்முறையும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.அந்த ஒப்பந்தத்தில் கொரானா தொற்றினால் தாய், தந்தை களை இழந்து வீட்டில் துவண்டு கிடக்கும் மாணவர் மாணவிகளின் கல்லூரிப் படிப்பு கனவில் கரைந்து விட விடக்கூடாது என்பதற்காக அவர்களில் 10 நபர்களுக்கு,
சேலம் மற்றும் தர்மபுரியில் உள்ள தங்கள் கல்லூரிகளான
1.ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
2.ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி
3. கைலாஷ் மகளிர் கல்லூரி
4.சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி
5.ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி
6. ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(விமான நிலையம்) ஆகிய கல்லூரிகளில் சேர்க்கை அளித்து,10 மாணவர்களுக்கான மூன்று வருட படிப்பு செலவையும் தங்கள் கல்லூரி நிர்வாகமே ஏற்பதாக அறிவித்து அதன்படி ஏவிஎஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜநாயகம் அவர்களிடம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பரிமாறப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்கள் ஊரில் கொரானா தொற்றினால் தாய் தந்தையர்களை இறந்த மாணவர்கள் மாணவிகள் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்பிற்கான சேர்க்கை தேவைப்பட்டால் தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் அவர்கள் மூலமாகவோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்க அனைத்து மாவட்ட தலைவர்கள் மூலமாகவோ தொடர்புகொண்டு மேலே குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான
(2020-21) சேர்க்கை பெறலாம் என சேலம் மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply