ஜக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி

Loading

ஜக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் மற்றும் செய்தித்தொடர்பாளர் திரு கு.தியாகராஜன் நன்றி தெரிவித்தார்..

தனது அயராத உழைப்பினால் மக்களோடு மக்களாக பயணித்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று தமிழக முதல்வராக பணி ஏற்ற நாள் முதல் இன்றுவரை கொரனோ கொடுந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்க தமிழக மக்களின் நலன் காக்க தன் உயிரையும் துச்சமென நினைத்து இந்திய ஒன்றியத்தில் உள்ள எந்த ஒரு மாநில முதல்வரும் முயற்சிக்காத ஒன்றை அதாவது கொரனோ சிகிச்சை மையத்திற்கு கவச உடை அணிந்து நேரடியாக தளத்தைப் பார்வையிட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பெரும் நம்பிக்கை அளித்து வரலாற்றில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு உறுதுணையாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் கண் துஞ்சாது மக்கள் நலப் பணி செய்வதன் விளைவாக இன்று கொரோனா கொடும் தொற்று கணிசமாக குறைந்துள்ளது.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசு இயந்திரத்தின் சக்கரத்தை போன்றவர்கள். அரசு தேரின் அச்சாணி போன்றவர்கள் என்று கூறிய முத்தமிழ் அறிஞர் கல்வி காவலர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் அனைத்து தரப்பு மக்களின் முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ போராட்டத்தின்போது பழிவாங்கும் நோக்கோடு காழ்ப்புணர்ச்சியோடு வஞ்சனையோடு ஆசிரியர் அரசு ஊழியர்களை ஒடுக்க அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து குறைந்தபட்சம் ஜேக்டோ ஜியோ நிர்வாகிகளை கூட அழைத்து பேச மனமில்லாத அரசாக முந்தைய அரசு செயல்பட்டது.

ஆசிரியர் அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் செய்ததையும் அதில் ஒரு கட்டமாக ஆசிரியர் அரசு ஊழியர் மீது பொய்யான, புரட்டான வழக்குகளை புனைய பட்டதையும் பல்வேறு துறை சார்ந்த குற்ற குறிப்புகளை வழங்கியதையும், தற்காலிக பணிநீக்கம், செய்யப்பட்டதையும், விருப்பமில்லாத கட்டாய ஓய்வு பணியிட மாறுதல் வழங்கியது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் அரசு ஊழியர் ஆசிரியர்கள் நியாயமான போராட்டத்தை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும்.

என்று அறிக்கை வெளியிட்டார் மேலும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம்.
கழக ஆட்சி அமைந்தவுடன் இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் மற்றும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழக முதல்வராக பதவியேற்ற சில நாட்களிலேயே ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த அறிவிப்பு ஆசிரியர் அரசு ஊழியர் மத்தியில் பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்கள் நேற்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்ய ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறது.
இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஜேக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழங்கப்பட்ட கட்டாய பணியிடமாறுதலை ரத்து செய்து மீண்டும் பழைய இடத்திலேயே பணிபுரிய மாண்புமிகு தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

0Shares

Leave a Reply