தேனாம்பேட்டை பகுதியில் தாய் மற்றும் மகனை இரும்பு கம்பியால் தாக்கிய சகோதரர்கள் இருவர் கைது.

Loading

சென்னை, தி.நகர், டாக்டர் தாமஸ் சாலை, குடிசை பகுதியில் உள்ள ஒரு
வீட்டில் வசிக்கும் உமாராணி, பெ/வ.40, க/பெ.பலராமன் என்பவர் அவரது மகன்
கோபிநாத், வ/19 என்பவருடன் நேற்று (30.6.2021) இரவு சுமார் 09.30 மணியளவில்
வீட்டினருகே டாக்டர் தாமஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு
தெரிந்த 2 ஆண் நபர்கள் இருவரையும் வழிமறித்து இரும்பு கம்பியால் இருவரையும்
தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற பின் உமாராணி இச்சம்பவம் குறித்து E-3
தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு
செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணனின் தம்பி
நீலமேகம் என்பவரும், உமாராணியின் மகன் கோபிநாத்தும் சுமார் 6 மாதங்களுக்கு
முன்பு இருசக்கர வாகனங்களில் சென்றபோது மோதியதில் வாக்குவாதம் ஏற்பட்டு
பிரிந்து சென்றதும், அந்த முன்விரோதம் காரணமாக நீலமேகம் மற்றும் அவரது
அண்ணன் லட்சுமணன் சேர்ந்து நேற்று (30.6.2021) இரவு உமாராணியையும், அவரது
மகன் கோபிநாத்தையும் தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில், எதிரிகள் நீலமேகம், வ/30, த/பெ.மகாலிங்கம், எண்.118, நொச்சி
நகர், மயிலாப்பூர், சென்னை மற்றும் அவரது அண்ணன் லட்சுமணன், வ/45,
த/பெ.மகாலிங்கம், எண்.45, 33வது பிளாக், டாக்டர் தாமஸ் சாலை, தி.நகர் ஆகிய 2
நபர்களை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் இருவரும் இன்று (01.7.2021) நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *