தொழில் நிபுணத்துவ மேலாண்மையும் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதும் டோக்கியோ ஒலிம்பிக்குக்கான தயாரிப்பை சரியான பாதையில் செலுத்துகின்றன அடில்லெ சுமரிவல்லா
அடில்லெ சுமரிவல்லா
தனிநபருக்கான ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்கு
உரியதாகும். அதே போன்று பலன் தரும் கூட்டு முயற்சியும் மிகுந்த மகிழ்ச்சி
தரும். எந்தவிதமான முரண்பாடு குறித்த பயமும் இல்லாமல் இதனை உண்மை
என்று தற்போதைய ஒலிம்பிக் சுற்றை முன்வைத்து என்னால் கூற முடியும்.
டோக்கியோ 2020க்காக இந்தியாவின் சிறந்த அத்லெட்டுகள் தாங்களாகவே பயிற்சி
பெற்றுக் கொள்ளும் வகையிலான வாய்ப்புகளை இந்தியா வழங்கி உள்ளது.
பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஓரு வருடம் தள்ளி வைக்கப்பட்ட இந்த
ஒலிம்பிக் பிரச்சாரத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உயர்நிலையிலான
ஒருங்கிணைப்பு இருக்கிறது. இந்திய விளையாட்டு சூழல்சார் அமைப்பின் பல
அங்கங்களுக்கு இடையில் இந்த ஒருங்கிணைப்பு செயல்படுகிறது. ஒலிம்பிக்
பதக்க கனவுகளுடன் இருக்கும் பெரும்பான்மையான விளையாட்டு வீரர்கள்
எந்தவிதமான தடையும் கவலையும் இல்லாமல் தங்களைத் தயார்படுத்திக்
கொள்ளும் வாய்ப்பு இதனால் கிடைத்துள்ளது.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய
விளையாட்டு ஆணையம் என முக்கியமான பங்குதாரர்கள் அனைவரும் ஒன்றாக
ஒரு தளத்தில் இணைந்தது என்பது ஒலிம்பிக் பயிற்சியை சரியான தடத்தில்
செலுத்த உதவியது. உதவி வேண்டும் என்று, வருடாந்திர போட்டி மற்றும் பயிற்சி
கால அட்டவணை மூலம் கிடைப்பதைத் தாண்டி, கூடுதலான உதவிகளுக்காக
அத்லெட்டுகள் விடுத்த கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதில் இதுவரையிலும்
இல்லாத வகையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டது.
இளையோர் உறவுகள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகத்தின் டார்கெட்
ஒலிம்பிக் போடியம் திட்டத்தைக் (TOPS – டாப்ஸ்) கண்காணிக்கும் மிஷன்
ஒலிம்பிக் பிரிவின் ஒரு அங்கமாக நான் இதனைப் பார்க்கிறேன். அத்லெட்டுகளின்
செயல்திறன் என்று வரும் போது டாப்ஸ் ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு சிறப்பாக
தயாராக இருக்கின்றனர் என்பதை நான் பார்த்தேன்.
தரவுகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்யும் சுறுசுறுப்பான உழைப்புதான்
இந்தியா கடைபிடிக்கும் தொழில்நிபுணத்துவ அணுகுமுறைக்கான நியாயமான
அடையாளமாக இருக்கிறது. சரியான பயிற்சி இடங்களைக் கண்டறிந்து வீரர்கள்
சேர்வதற்கு உதவுவது முதல் பயிற்சிக்கு உதவியாளரை அனுமதித்தல் வரை;
மிகச்சிறந்த பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெறுவது முதல் அனுபவமும்
திறமையும் வாய்ந்த துணை அலுவலர்களுக்கு ஊதியம் தருவது வரை மற்றும்
பெருந்தொற்றுப் பரவலால் விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் போட்டி
திட்டம் எந்த அளவிலும் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் பயணம் மற்றும்
தங்குமிட வசதிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து தருதல் என கடுமையான
உழைப்பு வெளிப்படுகிறது.
அத்லெட்டுகளிடமிருந்து பெறப்படும் முன்மொழிவுகளை, மிஷன் ஒலிம்பிக் பிரிவு
பரிசீலனை செய்யும் வழிமுறையின் மிக முக்கியமான அம்சம் எதுவெனில்,
அவை மிக விரைவில் அனுமதிக்கப்படுவதே ஆகும். இவை, சம்பந்தப்பட்ட
தேசிய விளையாட்டுகள் சங்கங்களின் பரிந்துரை இல்லாமல், அத்லெட்டுகள்
தாமாகவே முன்வைக்கின்ற முன்மொழிவுகள் ஆகும். இந்தியாவைப்
பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அதிகபட்ச நிலைக்கான அனுமதியைப் பெற்றார்
என்றால், அந்த மிகக் குறைந்த நடைமுறைக்கான கால அவகாசம் என்பது
இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றாகவே இருக்கும் என நான் உறுதியாகச்
சொல்வேன். பெருந்தொற்றுப் பரவல் ஒவ்வொருவரிடமும் நிச்சயமற்ற
மனப்பான்மையை சுமத்தி உள்ளது என்ற போதிலும் மிஷன் ஒலிம்பிக் பிரிவு
அந்தப் பெருஞ்சுமையைத் தாண்டியும் உணர்வுப்பூர்வமாக பெரும்பாலான
முன்மொழிவுகளை அனுமதித்து உள்ளது. சாதாரண காலகட்டம் என்றால் நாம்
ஒவ்வொரு முன்மொழிவையும் பரிசீலிக்க நிறைய கால அவகாசம் எடுத்துக்
கொள்வோம்.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதில் எந்தவிதமான தாமதமும் ஏற்பட்டு,
அதனால் அத்லெட்டுகளுக்கு மன அழுத்தம் உருவாகி விடக்கூடாது என்பதே
அடிநாதமாக இருக்கும் சிந்தனையாகும். நேர்மையாகச் சொல்வதென்றால்,
ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொள்ள பாடங்கள் உள்ளன. வர இருக்கும் ஒலிம்பிக்
சுற்று நல்லதே நடக்கும் என்று எடுத்துக்காட்டுகிறது. அனைத்து தேசிய
விளையாட்டுகளின் கூட்டமைப்பு மற்றும் அத்லெட்டுகள் அரசாங்க
விஷயங்களில், அடிப்படை முன்ஜாக்கிரதை நடவடிக்கை இருக்கிறது என்பதை
உணர்ந்து அதற்கேற்ப நடக்கத் தொடங்குவார்கள். குழு மனப்பான்மையும்
தற்போது இந்திய விளையாட்டுத்துறை மேற்கொண்டுள்ள தொழில்நிபுணத்துவ
மேலாண்மை முறையும் நீண்ட காலத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்.
(கட்டுரை ஆசிரியர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர் மற்றும் இந்திய
அத்லெட்டுகள் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்