ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் தாமரைக்குளத்தில் பாஜக சார்பில் தேசிய துணை தலைவர் அருணா மரக்கன்றுகள் நடும் விழா.. திரளான பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு.
புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் மரம் நடு விழா கூடப்பாக்கம் தாமரைக் குளத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசியத் துணைத்தலைவர் அருணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தீப்பயந்தான், பாஜக பிரமுகர் ஜெயக்குமார் ரெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீனா தலைமையில் தேசியத் துணைத் தலைவர் அண்ணா அவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு பரிசுகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், வில்லியனூர் மாவட்ட தலைவர் எஸ் எஸ் ஆனந்தன், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.