சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… ஜவுளிக்கடை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு…
திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் தாமோதரன் வயது 58. திருக்கனூரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி வந்தார். மாதம் 1000 செலுத்தி வந்தால் குலுக்கள் விழுந்தால் பணம் கட்ட தேவையில்லை என்றும், குலுக்கள் விழாதவர்களுக்கு 50 மாத முடிவில் 55 ஆயிரம் தருவதாக தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வலையை வீசினார். இதனை நம்பி அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் குலுக்கல் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.
தொடக்கத்தில் குலுக்கள் விழுந்ததாக ஒரு சிலருக்கு பணத்தையும் கொடுத்து வந்தார். ஆனால் அதன்பிறகு பலருக்கு தவணை காலம் முடிந்தும் பணத்தை கொடுக்கவில்லை. சீட்டு கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி அலைகழித்து வந்தார். அதுபோல் திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டை சேர்ந்த சத்துணவு ஊழியர் நா நாவாத்தாள் 50 வயது என்பவரும் 4 குலுக்கள் சீட்டு கட்டி வந்தார். மேலும் நான் நாவாத்தாளிடம் தொழில் மேம்பாட்டிற்காக தாமோதரன் 15 லட்சம் வாங்கி இருந்தார். இந்த பணத்தை நாவாத்தால் அவ்வப்போது கேட்ட போது ஒரு சில நாட்களில் தருவதாக ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் தாமோதரன் திடீரென தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். இதுபோல் தாமோதரனிடம் குலுக்கல் சீட்டில் சேர்ந்து பணத்தை இழந்த பலரும் போலீசில் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 லட்சம் வரை தாமோதரன் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வருகிறார்க