சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரணம் வழங்கினார்..

Loading

கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நலிவடைந்த நாடக நடிகர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக கட்சி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாடகக் கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நாடகக் கலைஞர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று நிவாரணத்தை
பெற்றுக்கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *