முன்னாள் மத்திய மந்திரி ஷியாம் பிரசாத் முகர்ஜி நினைவுநாள்
தஞ்சாவூர்,
சுதந்திர இந்தியாவின் முதல் தொழில் துறை மந்திரியாக இருந்தவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி. அவரது நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சை சின்ன ஆஸ்பத்திரி உள்ள பா.ஜ.க.அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஸ் தலைமை தாங்கினார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம் மாவட்ட பொருளாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் மாயகண்ணன் சாமிநாதன் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேஸ்வரன் மாநகர் பொதுச்செயலாளர் பெருமாள் சந்திரபோஸ் நெசவாளர் பிரிவு கே.ஜி.குமரன், ரவிக்குமார், நந்தகுமார் கல்வியாளர்
பிரிவு உத்திராபதி ஆர்.எஸ்.எஸ்.ரமேஷ், ராமானுஜர் மானம்புசாவடி விஜயன், ராஜம், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.