மாரண்டஅள்ளி அடுத்த கெசர்குளிடேம் பின்புறம் ஒரு நாட்டு துப்பாக்கி மாரண்டஅள்ளி போலீசார் பறிமுதல் வீசி சென்ற நபர் யார் என்று விசாரணை.
பாலக்கோடு.ஜுன்.25–
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல்துறைக்கு பெல்லுஅள்ளி அடுத்த கெசர்குளிடேம் பின்புறம் நாட்டு துப்பாக்கி இருப்பதாக ஆடுமேய்க்கும் நபர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து மாரண்டஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் சென்று பார்க்கையில் கெர்குளி டேம் பின்புறம் கேட்பாரற்று கிடந்த ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சேர்த்தனர் இது குறித்து நாட்டு துப்பாக்கி வீசி சென்றவர் யார் என்று மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.