தமிழ்நாடு பால் முகவர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கே எம் கமாலுதீன்
மாதவரம் பால் பண்ணையில் இருந்து வடசென்னபகுதிகளான தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை. உள்ளிட்ட ‘பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்களில் விலை தவறுதலாக அச்சிடப்பட்டு உள்ளது. தெரியவந்துள்ளது. எனவே பால் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதனை சரி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கே எம் கமாலுதீன் கேட்டுக்கென்டுள்ளார்.,மேலும் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ஆவின் பால் விலையை குறைத்தது போன்று தனியார் பால் முன்னணி நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்துள்ளது..நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மேலும் ஜெர்சி திருமலா போன்ற தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள்தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கே எம் கமாலுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்…