இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி பெண் காவலர் மீது மோதிய 3 இளஞ்சிறார்களுக்கு காவல் ஆணையாளர் உத்தரவுப்படி பெற்றோருடன் கலந்தாய்வு ஆலோசனை

Loading

G-1 வேப்பேரி காவல் நிலைய காவல் குழுவினர் நேற்று (22.6.2021)
காலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டவுட்டன் சிக்னல் அருகே வாகனத்
தணிக்கையில் இருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3
வாலிபர்களை காவல் குழுவினர் நிறுத்தச் சொன்னபோது, அந்த வாலிபர்கள்
நிலைதடுமாறி, அங்கு பணியிலிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ராதா
என்பவரின் கால் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால், பெண் காவலர் சிறிய
காயத்துடன் தப்பினார். உடனே, காவல் குழுவினர் 3 வாலிபர்களையும் மடக்கிப்
பிடித்து, D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில்
ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 18 வயது நிரம்பாத ஒரு இளஞ்சிறார்
மற்றும் 17 வயதுடைய 2 இளஞ்சிறார்கள் என்பதும், மூவரும் 11ம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், விபத்தில்
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் காவலர் ராதா, விபத்து
ஏற்படுத்தியவர்கள் மாணவர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என
கேட்டுக் கொண்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
அறிவுரையின்படி, வழக்கு பதிவு செய்யாமல், போக்குவரத்து காவல்துறையினர்,
அவர்களுக்கு தகுந்த கலந்தாய்வு ஆலோசனை வழங்க முன் வந்தனர்.
அதன்பேரில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர்
(கிழக்கு) திரு.நல்லதுரை தலைமையில், D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து
புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.இந்திரா மற்றும் காவல் குழுவினர்,
விபத்து ஏற்படுத்திய 3 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை
(23.6.2021) காலை, D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு
அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்தாய்வு ஆலோசனை (Counselling) நடத்தி,
தகுந்த அறிவுரைகள் வழங்கினர்.

இந்த கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில், 18 வயது நிரம்பாத
வாலிபர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதால்,
ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அதனால், பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த
நபர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல்
வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள், வயது தகுதியில்லாமல்,
முறையான பயிற்சி பெறாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனங்களை
இயக்குவதால் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் விபத்துக்கள் குறித்தும்,
மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்து, 18 வயது
நிரம்பாத மற்றும் ஒட்டுநர் உரிமம் பெறாத பிள்ளைகள் கட்டாயம் வாகனங்கள்

இயக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரைகள்
வழங்கப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறை
ஆலோசனைகள் மற்றும் சட்ட விதிகளை மதித்து நடப்பதாக எழுதி
கொடுத்ததின்பேரில், அனைவரும் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
மேலும், போக்குவரத்து புலனாய்வு கிழக்கு உதவி ஆணையாளர்
தலைமையில், இது போல அதிவேகமாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும்
வாகனங்களை ஓட்டிய சுமார் 11 நபர்களை பிடித்து அவர்களது பெற்றோர்களை
வரவழைத்து எச்சரித்தும், தகுந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி,
அறிவுரைகள் வழங்கியும் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply