திருவள்ளூரில் 79 பயனாளிகளுக்கு 20.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

Loading

திருவள்ளூர் ஜூன் 23 : திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட 46 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவித் தொகை சுமார் ரூ.17,48,000 மதிப்பிலான 8 கிராம் தங்க நாணயங்களும்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்ட பத்திரம் ரூ.10,000 மதிப்புடைய பத்திரம், 12 பயனாளிகளுக்கும், ரூ.20,000 மதிப்புடைய பத்திரம் 8 பயனாளிகளுக்கும், ரூ.2,90,000 வீதமும், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.59,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், 79 பயனாளிகளுக்கு ரூ.20,87,000 மதிப்பிலான நலத் திட்டங்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 18 மருத்துவர்கள் உட்பட மருத்துவ பணியாளர்களை நியமித்து மகப்பேறு, குழந்தைகள் நலன், வளர் இளம் பருவ பெண்கள் நலன், தொற்று மற்றும் தொற்றா நோய் தடுப்பு, பூச்சிகளால் பரவும் நோய், நாய் கடி சிகிச்சைகள், விபத்து சிகிச்சைகள், இ.சி.ஜி பரிசோதனை வசதிகளுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, துணை தலைவர் திரு.தேசிங்கு, திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) செ.இராஜராஜேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *