மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நாச்சியார் கோயிலில் ஆர்ப்பாட்டம்

Loading

கும்பகோணம் ஜூன் 17

தஞ்சை வடக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி திருவிடைமருதூர் மேற்கு ஒன்றியம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்த பொது மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட கோரியும் குரானா காலகட்டத்தில் மதுக்கடை தேவையில்லை என்ற முழக்கத்துடன் தமிழக அரசிற்கு வழியுறுத்தி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீட்டின் முன்பாக முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தும் கருப்புக்கொடி ஏந்தி அறப் போராட்டம் செய்தனர்

போராட்டத்தில் ஒரு பகுதியாக திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பி. சண்முகம் மாவட்ட துணை செயலாளர் ரங்கநாதன் ஒன்றிய விளம்பர அணி செயலாளர் பாண்டியன் ஒன்றிய இலக்கிய அணி தலைவர் தர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *