தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று காலை 5 மணி அளவில் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆவின் பாலகங்களை ஆய்வு
பால் விலை லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்பட்டது பொதுமக்களுக்கு போய் சேர்கிறதா ? பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று காலை 5 மணி அளவில் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆவின் பாலகங்களை ஆய்வு மேற்கொண்டு பாலக ஏஜெண்டுகளிடம் குறைகளை கேட்டறிந்தார் பிறகு ஆவின் பால் செறிவூட்டும் நிலையத்திற்கு சென்று ஆவின் செறிவூட்டும் மையத்தில் ஆய்வின் பொழுது ஆவின் அலுவலக அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பால் கொதிகலன்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்டு செறிவூட்டும் இயந்திரங்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்பேரில் “கொரோனோ” நோய்த்தொற்று காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதை அறிவித்து இருந்தார் அத்தியாவசிய பொருளாக பால் லிட்டருக்கு ரூ 3 குறைத்து விற்கப்படுவதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்கவும் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் ஈரோட்டில் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைத்துள்ள பால் பவுடர் சேமிப்புக் கிடங்கை யும் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது ஆவின் நிர்வாக இயக்குனர் ஆர.நந்தகோபால் ஐஏஎஸ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு ஆவின் தலைவர் கே.கே காளியப்பன் ஆவின் பொது மேலாளர் சுபா நந்தினி, ஆவின் மாவட்ட பதிவாளர் புவனேஸ்வரி, ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர் .