ஒட்டன்சத்திரத்தில் பாஜக சார்பில் தமிழக அரசு மதுபான கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பாஜக சார்பில் தமிழக அரசு தளர்வு படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மேலும் தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்து கிடக்கும் மக்களை சாகடிக்கும் மதுபான கடைகளை திறப்பதை கண்டித்து பாஜகவினர் அவரவர் இல்லத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்களை பதிவு செய்தனர்.

மேலும் தமிழக முதல்வருக்கு ஊரடங்கு காலங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் குடும்ப பெண்கள் அனைவரும் தமிழக முதல்வருக்கு கருணை கடிதம் எழுதியுள்ளனர் இந்த மதுபானக்கடைகள் இதுபோல் நிரந்தரமாக மூடப்பட்டால் எவ்வளவு ஏழை குடும்பங்கள் மகிழ்ச்சியோடு வாழும் என்பதை தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு வருவாய்
பெறுவதற்காக மதுபானக் கடைகள் திறப்பது மக்களை மிகவும் இன்னல்களுக்கு ஆளாக்கும் நிலை என்பதனால் பாஜகவினர் மதுபான கடைகள் திறப்பதை கண்டித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் இல்லத்திலே தமிழக அரசு மதுபான கடைகளை மூட வேண்டுமென கோஷங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர் இதில் பாஜக மாவட்ட பார்வையாளர் எஸ். கே.பழனிச்சாமி,
மாவட்ட பொதுச்செயலாளர்A.N.வீரமணி நகர தலைவர் சாக்கு கடை சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *