புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபானம் கடத்தல்… வில்லியனூர் போலீசார் 77 ஆயிரம் மதுபானத்தை பறிமுதல் செய்ததோடு ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபானம் கடத்தல்… வில்லியனூர் போலீசார் 77 ஆயிரம் மதுபானத்தை பறிமுதல் செய்ததோடு ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்திற்கு புதுச்சேரி நகர பகுதியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுபானம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது அடுத்து தமிழக எண் கொண்ட ஆம்புலன்ஸை பிடித்து சோதனை மேற்கொண்டார். அப்போது அதில் 20 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் மதுபானம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ஆம்பூர் சாலையில் உள்ள மதுபான கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார், வடலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக், சென்னை பகுதியை சேர்ந்த சபரிராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.மேலும் ஆம்புலன்சில் இருந்த 77 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்ததோடு,ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.