மாரண்டஅள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கையில் இருந்த கடப்பாரை சிறுவன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழப்பு

Loading

மாரண்டஅள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கையில் இருந்த கடப்பாரை சிறுவன் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழப்பு
பாலக்கோடு, ஜூன்.6-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்ட பாவாளி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வீரபத்திரன் (17) இவர் தன்னுடைய தங்கையுடன் மோட்டார் சைக்கிளில் அமானி மல்லாபுரத்தில் இருந்து தனது வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார், அப்போது அமானி மல்லாபுரம் அருகே உப்பாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த மர வியபாரி சிக்குண்டன் (60) என்பவர் தனது வாகனத்தில் அதேபகுதியை சேர்ந்த பெருமாள் (59) என்பவரை உட்கார வைத்துக் கொண்டு அமானி மல்லாபுரம் நோக்கி வந்து கொண்டி ருந்தார், பெருமாள் தனது தோள்பட்டையில் கடப்பாரையை வைத்து கொண்டு பின்னால் அமர்ந்து வந்தார் அப்போது தொட்ட பாவளி அருகே அன்னா துரை என்பவரின் வீட்டின் அருகே எதிரே வந்த வீரபத்திரன் மீது மோதியதில் பெருமாள் கையிலிருந்த கடப்பாரை வீரபத்திரன் மார்பில் குத்தியது இதனால் வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார், தகவலறிந்த மாரண்டஅள்ளி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் குமார் சிக்குன்டன் மற்றும் பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *