பாலக்கோட்டில்.சரக்கு வாகனத்தில் பெட்டி பெட்டியாக மது கடத்தல்.. இருவர் கைது வாகனம் பறிமுதல்

Loading

பாலக்கோடு.ஜுன்.1-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட் சோதனை சாவடியில் காவல் துணை கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனை செய்து வந்தனர், அப்போது ஓசுரில் இருந்து தர்மபுரி நோக்கி கர்நாடகா பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் அந்த வழியாக வந்தது சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டிருந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 4230 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து, மது கடத்தலில் ஈடுபட்ட பாலக்கோட்டை சேர்ந்த அஜித்குமார் (22) ஒசூரை சேர்ந்த நாகராஜ்(27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவான சரவனனை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுவிற்கு தட்டுபாடு நிலவி வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கியுள்ள மது கடத்தும் நபரகள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்தற்கு மது பாட்டில்களை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது, அதே சமயம் போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *