திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நடமாடும் தடுப்பூசி போடும் முகாம், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு :
திருவள்ளூர் 30: திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தோற்று தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 33 நடமாடும் வாகனங்களும், 33 மருத்துவ குழுக்கலும் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட இராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நகராட்சி ஆணையர் ஏற்பாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆகியோர் இணைந்து நடத்திய மருத்துவமுகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
கொரோனா தோற்று தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம்களில் இன்று 6 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் ஆவடி மாநகராட்சி 515 பேருக்கும், திருவள்ளூர் நகராட்சி 142 பேருக்கும்,திருவேற்காடு நகராட்சி 333 பேருக்கும்,பூவிருந்தவல்லி நகராட்சி 92 பேருக்கும்,திருநின்றவூர் பேரூராட்சி 147 பேருக்கும்,மீஞ்சூர் பேரூராட்சி 170 பேருக்கும்,அயப்பாக்கம் ஊராட்சியில் 468 பேருக்கும்,வேப்பம்பட்டு மற்றும் காக்களூர் ஊராட்சியில் 86 பேருக்கும், காட்டுப்பாக்கம் 308 பேர் என மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மொத்தம் 2261 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், இரண்டு நாட்களில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.இதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால் (திருவள்ளூர்), திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம்,மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.