திருவள்ளூர் அருகே ரவுடிகளாக வலம் வர வேண்டும் என்பதற்காகவே சாலையில் வருபவர்களை தாக்கும் 4 பேர் கொண்ட ‌கும்பலை‌ காவல் துறையினர் கைது :

Loading

திருவள்ளூர் 30 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே உள்ள ராஜ பத்மநாபபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வினோத் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் கலியனூர் பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த சுனில், சோனால், சூர்யா, பகவதி ஆகிய 4 பேர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த வினோத் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஹாரன் அடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த 4 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் வினோத் மற்றும் விஜயகுமாரை குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றபின் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுனில், சோனால், சூர்யா பகவதி ஆகிய 4 பேரும் ரவுடிகளாக வலம் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்று வீண் தகராறில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4பேரையும். காவல் துறையினர் கைது‌ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *